![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxGGPsUCNyw1qc_AonVcZ6N2vOZvwTK2QSqUaVJlEz2mcuRmHQjOWBkrIZXHBgBMTr43tTeY284j6tfIE6Vh1esaoBOi-zompSpCPnyJGSBafBtlTHe6jFNk__xkmeRc1qutf2LUWsrQ4/s320/SadMan.jpg)
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
No comments:
Post a Comment